யாழ்.இளவாலை தெற்கில் தவறணையொன்றில் கள்ளு அருந்தியவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார்

2 months ago



யாழ்ப்பாணம் இளவாலை தெற்கில் தவறணையொன்றில் கள்ளு அருந்தியவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ்.சங்குவேலி தெற்கு, மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கவேலு (வயது- 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மாரடைப்புக் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

அண்மைய பதிவுகள்