முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் நீரில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டுபிடிப்பு
4 months ago

சுதந்திரபுரம் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தினைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த சனிக்கிழமை அன்று காணாமல் போயுள்ளார்.
பின்னர் அவரைத் தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டிருந்த போதும், அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைத்திருக்கவில்லை.
இந்நிலையில் நேற்று குறித்த இளைஞனது வீட்டு கிணற்றில் சடலம் மிதந்துள்ளது.
பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸிற்கு தகவல் வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டது.
சுதந்திரபுரம் பகுதியினைச. சேர்ந்த பிலிப்குமார் டினோஜன் எனும் 28 வயதுடைய இளைஞரே மரணமடைந்துள்ளார்.
குறித்த இளைஞனின் மரணம் தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
