தெற்கு அரசியலில் வெகுவிரைவில் ஏட்டிக்குப்போட்டியாக கட்சித் தாவல்கள் சூடுபிடிக்கும் என சிங்களவார இதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன எனவும் கட்சிதாவும் காலப்பகுதி பற்றி ஆராயப்பட்டு வருகின்றது என்றும் தெரியவருகின்றது.
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே தாவல்கள் பெருமளவில் இடம்பெறக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசுடன் இணையவுள்ளனர்.
அதேபோல ஆளுங்கட்சி பக்கம் உள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
அத்துடன், சர்வஜன அதிகாரம் பக்கமும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லவுள்ளனர். மேலும் சிலர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
எனவே, கட்சித் தாவல்கள் களைகட்டும் எனவும் சுமார் 40 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை மாற்றத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
