

விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.
மாங்குளத்தைச் சேர்ந்த மரியதாஸ் யுவான்கீர்த்தி (வயது-36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி இவர் விபத்தில் சிக்கியிருந்தார்.
மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி வந்தபோது எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நடந்திருந்தது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்திருந்த நிலையில், இவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
மாங்குளம் மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், இவர் நேற்று உயிரிழந்தார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
