இலங்கை மத்திய வங்கிக்கும், சீன மக்கள் வங்கிக்கும் இடையில் கையொப்பமிடப்பட்ட இருதரப்பு நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம் 03 ஆண்டுகளுக்கு நீடிப்பு

இலங்கை மத்திய வங்கிக்கும், சீன மக்கள் வங்கிக்கும் இடையில் 2021 ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்ட இருதரப்பு நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அசல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 2024 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் ஒப்பந்தம் வெற்றிகரமாக நீடிக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் 10 பில்லியன் சீன யுவான் (சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) நாணய மாற்று வசதி மூலம் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நிதி ஒத்துழைப்பை தற்போதைய ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, மத்திய வங்கியின் சார்பாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
மேலும், சீன மக்கள் வங்கி சார்பில் அதன் ஆளுநர் பென் கோன் ஷெங் கையெழுத்திட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
