கனடாவில் எதிர்வரும் மாதங்களில் வீடுகளின் விலைகள் குறை வடையும் சாத்தியங்கள் காணப்படு கின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் வீட்டு அடகுக் கடன் தொகை வெகுவாக அதிகரித்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வீட்டு உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் அதிக எண்ணிக்கையான வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடு களை விற்பனை செய்வதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒரு தசாப்த காலத்தில் பாதிவாகாத அளவிற்கு தற்பொழுது வீட்டு விற்பனை குறித்த பட்டியல்க ளில் பல வீடுகள் விற்பனைக்காக பட்டியலிடப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது.
வீடுகளுக்கான நிரம்பல் அதி கரிக்கும் நிலையில் வீட்டு விலை களில் வீழ்ச்சி ஏற்படக் கூடும் என வீட்டுமனை சந்தை நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
அடகுக் கடன் தொகை அதிகரிப் பினை சமாளிக்க முடியாத கார ணத்தினால் வீடுகள் இவ்வாறு விற் பனை செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
