ஆண்டுக்கு சுமார் 3 இலட்சம் நாய் கடி சம்பவங்கள்.-- கால்நடை சுகாதார சேவை வைத்திய அதிகாரி யேஷான் குருகே தெரிவிப்பு

இலங்கையில் ஆண்டுக்கு சுமார் 3 இலட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாவதாக பொதுச் சுகாதார கால்நடை சுகாதார சேவை வைத்திய அதிகாரி யேஷான் குருகே தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் மனித விசர் நாய்க்கடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கடந்த வருடம் ரேபிஸ் நோயினால் 20 பேர் உயிரிழந்ததாகவும், இதில் 11 பேர் விசர் நாய் கடியால் உயிரிழந்ததாக அவர் கூறினார்.
மீதமுள்ள 8 இறப்புகளில், விலங்கு தெளிவாக அடையாளம் காணப்படவில்லை.
இவ்வாறு, நடுத்தர வயதுடையவர்கள் அதிகமாக விலங்கு கடிக்கு உள்ளாவதாகவும், அவர்களில் 2 பேரில் ஒருவர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாய்க்கடி அதிகமாகப் பதிவாகியிருந்தாலும், கடந்த பத்து வருடங்களில் படிப்படியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், குரங்கு கடி அதிகரித்துள்ளது.
மனித ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக வருடாந்தம் 600 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாக மருத்துவர் யேஷான் குருகே தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
