
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பாராளுமன்றம் 3 மாத விடுமுறை அளித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து, கஜேந்திரகுமாருக்கு ஜூலை 2ஆம் திகதியிலிருந்து 3 மாத விடுமுறை வழங்க எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிந்தார்.
இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் வழி மொழிந்தார்.
இதையடுத்து, கஜேந்திரகுமாருக்கு 3 மாத கால விடுமுறை அளிக்க சபை இணக்கம் அளித்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் வெளி நாடொன்றில் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
