வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுவை விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவில் இருந்த எமில்காந்தன் தாக்கல் செய்தார்.
7 months ago

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எமில்காந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் குழு சுயேச்சையாக போட்டியிடுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் நேற்று காலை வேட்புமனுவை அவர்கள் தாக்கல் செய்தனர்.
எமில்காந்தன் முன்னர் விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவில் பணியாற்றியிருந்தார்.
இதனால் அவரை இலங்கை அரசு முன்னர் கறுப்புப் பட்டியலில் இணைத்திருந்தது.
ஆயினும் அவரது பெயர் கடந்த ஆண்டு அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
