
வவுனியா - பறயனாலங்குளம் - ஆண்டியாபுளியங்குளம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பறய னாலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
