தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை டொரோன்டோ நகரத்தில் அமைப்பதற்கான பிரேரணை நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்

1 week ago



தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை டொரோன்டோ நகரத்தில் அமைப்பதற்கான பிரேரணை டொரோன்டோ நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்காபொரோ தென்மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்த இந்த பிரேரணையை நகரசபை உறுப்பினர் Josh Matlow வழிமொழிந்துள்ளார்.

தனது பிரேரணை டொரோன்டோ நகர சபை ஏகமனதாக நிறைவேற்றியதில் பெருமை கொள்கிறேன் என வாக்கெடுப்பின் முடிவில் பார்த்தி கந்தவேள் தெரிவித்தார்.

இந்த பிரேரணையை ஏகமனதாக ஆதரித்த நகர முதல்வர் Olivia Chow உட்பட ஏனைய நகரசபை உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நினைவகம் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஒரு போதும் மறைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என பார்த்தி கந்தவேள் நம்பிக்கை தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் வசிக்கும் ஸ்காபொரோவில் இந்த நினைவகம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேள் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளார். டொரோன்டோவில் தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை அமைப்பதற்கு தமிழ் சமூகத்துடன் இணைந்து டொரோன்டோ நகரசபை பணியாற்ற இந்த பிரேரணையில் கோரப்பட்டுள்ளது.