புதிய சட்டமூலம் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துங்கள்.-- கிழக்கு பெண் அமைப்பு, ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தை கொண்டு வருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுங்கள் என கிழக்கு மாகாண பெண் மனித உரிமை பாதுகாவலர் அமைப்பு, ஜனாதிபதி அநுரகுமாரவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஊடகச் சந்திப்பில் அந்த அமைப்பினர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் அனைத்துப் பெண்களும் இன, மத, சமூக வேறுபாடுகளைக் கடந்து ஆணாதிக்க அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆணாதிக்க மயப்பட்ட குடும்ப, சமூக, வேலைத்தள, அரச அடக்குமுறைகளுக்கு இலங்கைப் பெண்கள் அனைவருமே உள்ளாகின்றனர்.
இணைய வழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் இம்சைகள், வன்முறைகளால் சிறுமிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
எனினும், காத்திரமான சட்ட ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் தவறு செய்கின்றவர்கள் தப்பித்துக் கொள்கின்ற நிலைதான் தற்போதும் இருக்கின்றது.
இருந்த போதும், கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 41 வயதான நபருக்கு 30 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியதை எமது கிழக்கு மாகாண பெண் மனித உரிமை பாதுகாவலர் அமைப்பு வரவேற்கிறது.
இலங்கையில் இடம்பெறுகின்ற பெண்கள் மீதான வன்முறைகளை நிறுத்துவதற்கான சட்டங்களை விரிவுபடுத்துவதுடன், சட்டங்களில் சீர்திருத்தங்களை உடன் மேற்கொண்டு உதவுமாறும், அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான எல்லா விதமான பாரபட்சங்களையும் இல்லாது ஒழிக்கும் (சீடோ) சமவாயத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை முழுமையாக இலங்கையில் நடைமுறைப் படுத்துவதற்காக புதியதொரு சட்ட மூலத்தை உருவாக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.
இலங்கையின் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் பெண் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக இடம்பெறும் விசாரணைகளை உடன் நிறுத்த வேண்டும்.
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குமாறும், மேலும் அரசுக்கு எதிரான குற்றச் செயல்களை கையாள்வதற்கு போதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் பயங்கரவாதத் தடை சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
