முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி பாடசாலை ஆசிரியர்களால் கறுப்புபட்டி அணிந்து கவனவீர்ப்பு போராட்டம்.

முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி பாடசாலை ஆசிரியர்களால் கறுப்புபட்டி அணிந்து கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று மேற்கொள் ளப்பட்டது.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் தங்கியிருந்த வீடும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
எனவே குறித்த விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளியை கைது செய்யுமாறும், ஆசிரியருக்கு நியாயமான தீர்வு வழங்க வேண்டும், தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன் வைத்து வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர்கள் நேற்றுக் காலை 8.00 மணி தொடக்கம் 8.25 மணி வரை பாடசாலை வாயிலில் கையில் கறுப்புப்பட்டி அணிந்து கல்விக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் கவனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
