ஆழிப்பேரலையின் உயிர்நீத்த உறவுகளுக்கான 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.



























யாழ் மாவட்ட செயலகம்,மற்றும் அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஆழிப்பேரலையின் உயிர்நீத்த உறவினர்களுக்கான 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று(26) யாழ் மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தேசிய கொடியேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தின் உதவிப்பணிப்பாளர் ரீ.சூரியராஜ் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு நினைவேந்தலினை செலுத்தினார்
ஆத்ம சாந்திப்பிரார்த்தனை வேண்டி இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு அகல் விளக்கேற்றப்பட்டது.
இதில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி க. ஸ்ரீமோகனன்,அனர்த்த முகாமைத்துவ பதவிநிலை அலுவலகர்கள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
