
சீனாவின் உதவி திட்டங்கள் கடற்றொழிலாளர்களின் மனநிலை அறியாது முன்னெடுக்கப்படுகின்றதாகவும் மக்களுக்கு ஏற்ற திட்டங்களை கருத்தறிந்து முன்னெடுக்குமாறும் சுழிபுரம் திருவடிநிலை கெங்காதேவி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் செல்லன் தெய்வேந்திரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவடிநிலை பகுதியில் அமைந்துள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் -
சீன தேசத்திலிருந்து உதவித் திட்டங்கள் வருவதாக அறியக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் சீனப் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் தற்பொழுது வடக்கு-கிழக்கில் பெரிதும் பேசப்படுகிறது.
கடற்கரைக் காற்று, உவர் நீருக்கு வெகுவாக அழிவடை யும் இந்த வீட்டுத் திட்டத்தை பெரும்பாலும் எமது பிரதேசத்தவர்கள், தொழிலாளர்கள் முற்று முழுதாக நிராகரித்துள்ளார்கள்.
ஆகவே இந்த கரையோரத்துக்கு ஏற்ற திட்டங்களையே நடைமுறைப்படுத்த வேண்டும் என நாங்கள் கோருகின்றோம்.
சீன தேசத்தின் உணவுத் திட் டம் தொடர்பிலும் தற்பொழுது பேசப்படுகிறது. இலங்கையிலே வடக்கு-கிழக்கில் உற்பத்தி செய்யப்படுகின்ற சுதேச அரிசி வகைகளைத்தான் நாங்கள் இவ் வளவு காலமும் உண்டு வருகின் றோம்.
ஆகவே இங்கே உற்பத்தி செய்யப்படுகின்ற அரிசியை கொள்வனவு செய்து வழங்குவதன் மூலம் இரு தரப்பு நன்மை கிடைக்கப் பெறுகின்றது. மீனவர்களும் நன்மை அடைவதோடு மேலும் விவசாயிகளும் நன்மை அடையலாம்.
சீன தேசத்தின் உதவிகளை வரவேற்கின்றோம். ஆனால் முறையாக மக்களின் கருத்தறிந்து இந்த திட்டங்கள் நடை பெறவேண்டும்-என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
