மாவீரர் துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி நினைவுகூர விடவும்.-- சி.வேந்தன் தெரிவிப்பு

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தப் போவதாக தெரிவித்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நாள் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ள ஏதுவாக மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி உறவுகள் நினைவுகூர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி அநுரகுமார உறுதியாக கூறினார்.
நல்லிணக்கத்தின் முதலாவது நிகழ்வாக மாவீரர் நாள் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.
மாவீரர் துயிலும் இல்ல காணிகளிலிருந்தும் இராணுவத்தை வெளியேற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
