கொழும்பு கோட்டையில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகின்றன ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள்.
8 months ago


மக்கள் பயன்பாட்டுத் திறக்கப்படுகின்றன ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள்
கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் இதுவரை வீதித் தடைகளால் மூடப்பட்டிருந்த வீதிகளை மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் இதுவரை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன.
ஆனால், அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அந்த அனைத்து வீதித் தடைகளும் அகற்றப்பட்டு பல வருடங்களின் பின்னர் அப்பகுதியிலுள்ள வீதிகள் மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன.
அதன்படி, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக உள்ள சேர் பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை என்பன பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படுகின்றன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
