முல்லைத்தீவு பிரதேசத்தில், கிணற்றுக்குள் இருந்து 992 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிணற்றைச் சுத்தம் செய்வதற்கு உரிமையாளர் தயாரானபோது, கிணற்றுக்குள் தகரப்பெட்டியொன்று காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அந்தப் பெட்டியை மீட்டுள்ளனர்.
அதற்குள் விமான எதிர்ப்புத் தோட்டாக்கள் இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
