யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடத்திய பண்பாட்டு விழா


யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம், வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து நடத்திய பண்பாட்டு பெருவிழா சிறப்புற நடந்தது.
சங்கானை கலாசார மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்த நிகழ்வில் விருந்தினர்கள் சங்கானை பேருந்து நிலையத்திலிருந்து விருந்தினர்கள் பாரம்பரிய பொம்மலாட்டம், குதிரையாட்டம், இன்னியம் ஆகியவற்றின் அணிவகுப்புடன் விழா மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
தொடர்ந்து, மங்கலவிளக்கு ஏற்றிவைக்கப்பட்டு, நாடாவெட்டி வைக்கப்பட்டு மேடைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
கலை நிகழ்வுகள், கலைஞர்களுக்கான கௌரவிப்புகள், விருந்தினர்களின் உரைகள் என்பன வெகுசிறப்பாக நடைபெற்றன.
வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பண்பாட்டுப் பெருவிழாவில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில், உத்தியோகத்தர்கள் கலைஞர்கள், பொது மக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
