மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த முஹமட் பஸ்லி ஸீனத் என்ற 09 வயது சிறுமி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
7 months ago

மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த முஹமட் பஸ்லி ஸீனத் என்ற 09 வயது சிறுமி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கதிரவன் இன்பராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறுமி ஸீனத் 03 நிமிடம் 18 நொடிகளில் 140 பெருக்கல் கணக்குகளுக்கு விடை கொடுத்து உலக சாதனை படைத்தார்.
இவ்வாறு உலக சாதனை படைத்த சிறுமிக்கு சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தால் வழங்கப்பட்டன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
