சுவீடன் பேராசிரியர் பார்ட் க்லெம் எழுதிய "தமிழர்களின் ஆயுதப் போராட்டமும் போருக்குப் பிந்தைய நிலைமாற்றமும்" நூல் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில்
7 months ago

சுவீடன் நாட்டின் கோதம் பேர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பார்ட் க்லெம் எழுதிய “இறைமை பற்றிய அபிலாசைகளை நிகழ்த்திக் காட்டுதல்: இலங்கையிலே தமிழர்களின் ஆயுதப் போராட்டமும் போருக்குப் பிந்தைய நிலைமாற்றமும்" என்ற நூல் பற்றிய அறிமுக நிகழ்வு நாளை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
மொழியியல் ஆங்கிலத் துறையினரால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இந்த நிகழ்வில் நூலாசிரியர் பார்ட் க்லெம், நூல் பற்றிய தனது அறிமுக உரையை நிகழ்த்துவார்.
அதனையடுத்து சட்டத்தரணியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறை தலைவருமான கலாநிதி குமாரவடிவேல் குருபரன், சமூகவியற் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் ஆகியோரும் நூல் பற்றிய தமது கருத்துரைகளை வழங்குவர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
