புலம்பெயர் தொழிலாளர்கள், சிறைக் கைதிகள் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சிறைக் கைதிகள் ஆகியோரின் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் எழுத்துமூலமான கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சிறைக் கைதிகளின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரி உத்தியோகபூர்வமான கடிதமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி மீண்டும் கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கை யில்-
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியிடம் புலம் பெயர் தொழிலாளர் மற்றும் சிறைக்கைதிகள் ஆகியோரின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரியிருந்தேன்.
அப்போது சட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறியதோடு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில் இந்த ஆண்டில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஆகவே விரைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் குறித்த இரு தரப்பினருக்குமான வாக்குரிமையை உறுதி செய்ய முடியும்.
அந்த வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் குறித்த விடயத்தை வலியுறுத்தி எழுத்துமூலமான கோரிக்கையை விடுக்கவுள்ளோம்-என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
