புலம்பெயர் தொழிலாளர்கள், சிறைக் கைதிகள் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சிறைக் கைதிகள் ஆகியோரின் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் எழுத்துமூலமான கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சிறைக் கைதிகளின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரி உத்தியோகபூர்வமான கடிதமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி மீண்டும் கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கை யில்-
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியிடம் புலம் பெயர் தொழிலாளர் மற்றும் சிறைக்கைதிகள் ஆகியோரின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரியிருந்தேன்.
அப்போது சட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறியதோடு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில் இந்த ஆண்டில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஆகவே விரைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் குறித்த இரு தரப்பினருக்குமான வாக்குரிமையை உறுதி செய்ய முடியும்.
அந்த வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் குறித்த விடயத்தை வலியுறுத்தி எழுத்துமூலமான கோரிக்கையை விடுக்கவுள்ளோம்-என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
