திருகோணமலையில் இடம்பெறும் நில அபகரிப்புக்களில் இழந்த நிலங்களை மீளப்பெறுவதற்காக இணைந்து செயல்பட நடவடிக்கை

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறும் நில அபகரிப்புக்கள் தொடர்பாகவும், அபகரிப்புக்களை தடுப்பதற்காகவும் இழந்த நிலங்களை மீளப்பெறுவதற்கான சட்ட முன்னெடுப்புக்களை ஏற்படுத்தி நிலங்களை மீளப்பெற்றுக் கொள்வதற்காக வலையமைப்பாக இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நில மீட்புக்கான வலையமைப்பு கலந்துரையாடல் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நேற்றையதினம் காலை நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் நில உரிமை மறுக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அகம் மனிதாபிமான வள நிலையம் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் நிறுவனங்கள் இணைந்து இந்த நில மீட்புக்கான செயல்திட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டோரால் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் நில உரிமை மீறல் தொடர்பாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
இதற்கு தீர்வு காணும் செயல் திட்டங்களையும் இன்போது உருவாக்கிக் கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
