யாழ்.சிறுப்பிட்டியில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
இந்த இளஞர் நேற்று முன்தினம் இரவு தனது வாகனத்தில் நித்திரையில் இருந்த போது குளவி கொட்டியுள்ளது.
வலி தாங்க முடியாமல் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக நேற்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 35 வயதான இளைஞரே உயிரிழந்திருக்கின்றார்.
சடலம் உடல் கூற்று சோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 3 வாரத்துக்கு முதல் கோப்பாய் பகுதியில் குளவி கொட்டிய நிலையில் வயோதிபப் பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
