ட்ரோன்களைப் பயன்படுத்தி காடழிப்பை கண்காணிக்க நடவடிக்கை - வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவிப்பு
11 months ago
காடழிப்பு தொடர்பில் கண்காணிப்பதற்காக ட்ரோன்களை பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் இந்தச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வனப்பாதுகாப்பு ஆணையாளர் நிஷாந்த எதிரிசிங்க குறிப்பிட்டார்.
இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, முல்லைத்தீவு, மொனராகலை, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகளுடன் ட்ரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளன என வனப்பாதுகாப்பு ஆணையாளர் நிஷாந்த எதிரிசிங்க குறிப்பிட்டார்.
இதன் மூலம் மரம் வெட்டுதல், அனுமதியற்ற பயிர்ச்செய்கைகள் மற்றும் கஞ்சா வளர்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முடியும் என நிஷாந்த எதிரிசிங்க தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
