ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகள் புதிய அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.--24 சர்வதேச ஊடக அமைப்புகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் முறையான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என 24 சர்வதேச ஊடக அமைப்புகள் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோரிக்கை ஒன்றினை விடுத்திருக்கின்றன.
பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுத் தலைமையில் 24 சர்வதேச ஊடக அமைப்புகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன் வைத்திருப்பதுடன், புதிய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளன.
ஜனாதிபதிக்கான கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதியாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
இலங்கையின் அரசியல் அமைப்பினாலும் ஐ.சி.சி.பி. ஆரினாலும் பாதுகாக்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமைகளை உறுதி செய்யுமாறு உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வது மற்றும் பத்திரிகையாளர்களிற்கு எதிரான கடந்த கால குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வது ஆகியவை குறித்த தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதிகளை நாங்கள் வரவேற்கின்றோம்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும், அல்லது இந்த சம்பவம் குறித்து பொறுப்புக்கூறலிற்காக உடனடி பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
