யாழ்.வடமராட்சி கிழக்கில் பொலிஸ், இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், பொலிஸ், இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று சுமார் இரண்டு மணிநேரம் தீவிர சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
இந்த சுற்றிவளைப்பு மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகிய இச்சுற்றிவளைப்பின்போது எவரும் கைது செய்யப்படவில்லை.
கசிப்பு உற்பத்தி மற்றும் அதனால் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, அப்பகுதியில் நிலவும் பிரச்சினைகளை கட்டுப்படுத்தவே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, மாளிகைத்திடல் பகுதியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்ததனால், இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலில் இருவர் காயமடைந்ததுடன், இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
நேற்று காலை மேலும் இருவர் கசிப்புடன் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சுற்றிவளைப்பின்போது, அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இராணுவத்தினர் அங்கு ஒளிப்பதிவையும் மேற்கொண்டனர்.
மேலும், அம்பன் கிழக்கு மற்றும் கொட்டோடை பகுதிகளிலும் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
