இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி. பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் - டக்ளஸ் தெரிவிப்பு.
6 months ago

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி. பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் எனக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித் துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை யாழ். தெல்லிப்பழை மாவைகலட்டி பகுதி மக்களை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா சந்தித்துக் கலந்துரையாடினார்.
சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் போதே டக்ளஸ் தேவானாந்தா இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு மக்கள் மத்தியில் உரையாற்றிய டக்ளஸ் தேவானாந்தா, தான் மீண்டும் பாராளுமன்றம் செல்வேன் என நம்புவதாகவும், தேர்தலின் பின்னர் ஆட்சி யில் இருப்பவர்களுடன் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கட்சியின் கொள்கையின்படி இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
