விற்பனை செய்யும் போர்வையில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். ஒன்றாறியோவில் 200க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு

வீடு வீடாகச் சென்று விற்பனை செய்யும் போர்வையில் மக்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாறியோ மாகாணத்தில் இவ்வாறான 200க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வீடு வீடாகச் சென்று பொருட்கள் சேவைகளை விற்பனை செய்யும் போர்வையில் மக்களை ஏமாற்றி மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீடுகளுக்குச் சென்று வீடுகளை புனரமைப்பதாக கூறி இவ்வாறு பணம் மோசடி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் உதவிகளின் அடிப்படையில் வீடுகள் புனரமைக்கப்படும் எனக் கூறி இந்த மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமலே வீட்டைப் பயன்படுத்தி வீட்டு ஆவணங்களை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெறுவதாகவும் இவ்வாறு மோசடிகளில் சிக்கும் சிலர் தங்களது வீடுகளை இழக்க நேரிடுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
