யாழ்.நெடுந்தீவு வடதாரகை பயணிகள் படகு அடிக்கடி பழுது அடைவதால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்

4 months ago





யாழ்.நெடுந்தீவு வடதாரகை பயணிகள் படகு அடிக்கடி பழுது அடைவதால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்

வடதாரகை பயணிகள் படகில் ஏற்பட்ட பழுது காரணமாக நெடுந்தீவுக்கு செல்வதற்கு வந்த மக்கள் சுமார் மூன்றரை மணித்தியாலங்களாக காத்திருந்தனர்.

குறிகாட்டுவானில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய வடதாரகை படகு, பழுது காரணமாக பல மணி நேரம் தரித்து நின்றது.

இதனால், நெடுந்தீவு செல்ல முடியாமல் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என நூற்றுக் கணக்கானோர் இரவு 7.30 வரை கடும் குளிரில் குறிகாட்டுவான் இறங்குதுறையில் காத்திருந்தனர்.

அடிக்கடி பழுதடையும் வடதாரகை மற்றும் படகுகளால் நெடுந்தீவு      மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு  வருவதாக மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.    

அண்மைய பதிவுகள்