மன்னாரில் மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி விபத்தில் சிக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
7 months ago

மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி கணபதி (வயது-74) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவர் கடந்த 2ஆம் திகதி பேசாலை - மன்னார் வீதியால் தனது வீட்டை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்.
இதன் போது எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்தது.
இந்த நிலையில் அவர் மன்னார் - பேசாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மன்னார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
