யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கரப்பிள்ளை முருகையாவுக்கு 'உலகத் தமிழ்ச் சாதனையாளர் விருது 2024' வழங்கிக் கௌரவிப்பு
4 months ago

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரும் லண்டன் தமிழ்க் கல்வியகத்தின் நிறுவுநரும் பிரித்தானியத் தமிழ்ப் பரீட்சைச் சபையின் பிரதம இணைப் பரீட்சகருமான இலங்கைத் தமிழர் சங்கரப்பிள்ளை முருகையாவுக்கு புலம்பெயர் தேசங்களில் அவர் ஆற்றிய தமிழ்க் கல்வி வளர்சிப் பணிகளைப் பாராட்டும் முகமாக 'உலகத் தமிழ்ச் சாதனையாளர் விருது 2024' வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு புலம்பெயர் தேசத்தில் தமிழ்க் கல்விச் சேவைக்கான சர்வதேச அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
பாரதியாரின் 142 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னைத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் மலேசியத் தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து மலேசியாவில் நடத்திய மாநாட்டிலேயே அவருக்கு இந்தக் கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
