இலங்கை - இந்தியா இடையே கடல்வழியே கேபிள்கள் மூலம் மின்சாரத்தை பகிரும் திட்டம் தொடர்பான பேச்சுகள் இறுதிக் கட் டத்தை எட்டியுள்ளன என்று அரச உயர்வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை அநுராதபுரம் இடையே செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் தொடர்பாக கடந்த "நல்லாட்சி" அரசாங்கத்தின் காலத்தில்
பேச்சு ஆரம்பிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட இந்தத் திட்டம் ரணில் விக்கிரம சிங்க ஜனாதிபதியாக
பதவியேற்ற பின்னர் மீண்டும் பேச்சுகள் ஆரம் பிக்கப்பட்டன. இந்தத் திட்டம் தொடர்பில் பல 15 இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட நிலையில் இந்தத் திட்டம் தொடர்பான பேச்சுகள் இறுதிக் கட் டத்தை எட்டியுள்ளன.
இந்தத் திட்டம் நடைமுறையாகும் போது, சென்னை - அநுராதபுரம் இடையே 200 ஜிகா வோட்ஸ் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
