நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சீனாவின் விண்கலம் அங்கு சேகரிக்கப்பட்ட நிலவின் தரைத்துகள் மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றது.
அந்த விண்கலம் வருகிற 25 ஆம் திகதி பூமிக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை முதன்முறையாக தரையிறக்கி இந்தியா கடந்த ஆண்டு சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து சாங்கே-6 என்ற செயற்கைகோளை நிலவின் தென்துருவத்துக்கு சீனா அனுப்பியது.
இந்த செயற்கைகோளின் விண்கலம் கடந்த 2 ஆம் திகதியன்று நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இந்த சாங்கே-6 விண்கலம் நிலவில் இருந்து பாறைகள் மற்றும் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டது.
இதற்காக அந்த விண்கலத்தின் இயந்திரம் கடந்த இரு நாள்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது.
இந்த நிலையில் மாதிரிகளை சேகரித்த சாங்கே-6 விண்கலத்தின் லாண்டர் நிலவின் மேற்பரப்பில் இருந்து புறப்பட்டு அதன் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது.
இது வருகிற 25 ஆம் திகதி பூமிக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
