பாராளுமன்ற உறுப்பினர்கள் 169 பேர் தமது சொத்துக்கள் தொடர்பான விவரங்களை சபாநாயகருக்கு சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், இதுவரை 69 பேரே தமது விவரங்களை சமர்ப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத் துக்கள் தொடர்பான விவரங்களை பிரதி வருடமும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்குள் சபாநாயகருக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. எனினும் இதுவரை100 எம்.பிக்கள் தமது விவரங்களை கையளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே சபாநாயகரிடம் தமது சொத்துக்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிப்பர்.
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விவரங்களை ஜனாதிபதியின் செயலாளரிடமே கையளிப்பர். அந்த வகையில் இதுவரை சொத்துக்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல்கள், பாராளுமன்ற பிரதானிகளால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
