ஒற்றுமையாக தமிழ் மக்களின் வாக்குகளை பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தெரிவிப்பு.

ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந் துரையாடப்பட்டன என்று தெரிய வருகிறது.
இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல் படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை. இருப்பினும், அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று கூறியிருந்தார்.
இந்தச் சந்திப்பில் தமிழ் மக் களுக்கான அரசியல் தீர்வு மற்றும் ஜனாதிபதித் தேர்தல் நிலவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இந்த சந்திப்பில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ. கஜேந்திரன் எம். பி., "75 வருடகால அனுபவத்தில் தமிழ் மக்களால் ஒற்றையாட்சியின் கீழ் வாழ முடியாது என்பதைத் தாம் புரிந்துகொண்டிருப்பதாகவும், அதேபோன்று அரசமைப்புக்கான 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதால் அதனூடாக தமிழ் மக்களால் முன்னோக்கி செல்ல முடியாது-என்றும் கூறினார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
