உக்ரைன் மீது போர் தொடுக்கவும் அழிவுக்கும் அமெரிக்காதான் காரணம்”-- ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவிப்பு

அமைதி வழியையே நாங்கள் விரும்பினோம் ஆனால், உக்ரைன் தான் எங்களுடனான பேச்சுகளை நிறுத்தி விட்டது.
உக்ரைன்மீது போர் தொடுக்கவும் அழிவுக்கும் அமெரிக்காதான் காரணம்”- இவ்வாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நீடித்துவரும் நிலையில் புடின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஹபிரிக்ஸ்" என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16ஆவது உச்சி மாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில் நாளை 22ஆம் திகதியும் நாளை மறுதினம் 23ஆம் திகதியும் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதனையொட்டி நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் புடின் மேலும் கூறுகையில்,
"உக்ரைனுடனான பிரச்னையை அமைதி வழியில் தீர்க்கவே நாங்கள் விரும்பினோம்.
ஆனால், உக்ரைன் தான் அமைதிப் பேச்சுவார்த்தையை துண்டித்துக் கொண்டது.
இந்தப் பிரச்சினை வலுக்க அமெரிக்கா தான் காரணம்.
உலக நாடுகள் பலவும், ஏன் அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டாளிகள் கூட இப்போதெல்லாம் அமெரிக்க டொலரை வைத்து பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் இருந்து பின் வாங்குகின்றனர்.
சீனா மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது. சீனாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
ரஷ்யாவும் - சீனாவும் ஒரு தனித்துவ உறவைப் பேணுகிறது.
எங்களது உறவு சர்வதேச ஸ்திரத் தன்மையை நிர்ணயிக்கிறது"- என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
