எம்.பி அர்ச்சுனாவால் கடும் தாக்குதலுக்கு உள்ளான நபர் குருதிக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பு


நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் கடும் தாக்குதலுக்கு உள்ளான நபர் குருதிக் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தனியார் விருந்தினர் விடுதியொன்றிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
அர்ச்சுனா எம்.பி.யும் அவருடன் இருந்த பிறிதொருவரும் அனுமதியின்றித் தமது திறன்பேசியில் ஒருவரை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போதே அர்ச்சுனா எம்.பி.யால் பலமாகத் தாக்கப்பட்ட நபர் குருதிக் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
