



யாழ்.பருத்தித்துறை - கற்கோவளம் முகாமிலிருந்து இராணுவத்தை வெளியேற ஜனாதிபதி உத்தரவு
வடபகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு இராணுவத் தலைமையகத்தால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அமைச்சரவை பொறுப் பேற்று சில மணிநேரத்தில் இந்த அதிரடி உத்தரவை இராணுவத் தலைமையகம் விடுத்துள்ளது.
இதன்படி, நேற்றிலிருந்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் குறித்த இரா ணுவ முகாம் அமைந்துள்ள காணியில் இருந்து வெளியேறுமாறு இராணுவத் தலைமையகத்தால் இராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை - கற்கோவளம் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு மக்களும், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் கடந்த காலங்களில் பல கவனவீர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
குறித்த காணியை ஆக்கிரமிக்கும் வகையில் நில அளவீடு செய்வதற்குப் பல தடவைகள் முயற்சிகள் செய்யப்பட்டிருந்த போதிலும் மக்களின் எதிர்ப்பால் அந்தப் பணிகள் தடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
