32 ஆயிரம் மாதிரி வாக்குச் சீட்டுகளுடன் இருவரை அம்பாறை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
6 months ago

32 ஆயிரம் மாதிரி வாக்குச் சீட்டுகளுடன் இருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அரசியல் கட்சி ஒன்றால் அச்சிடப்பட்ட இந்த வாக்குச் சீட்டுகளை வாகனத்தில் எடுத்துச் சென்றபோதே பொலிஸார் கைப்பற்றினர்.
அம்பாறை மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே பொலிஸார் அவற்றைக் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட மாதிரி வாக்கு சீட்டில் முஸ்லிம் கட்சி மற்றும் விருப்பு இலக்கமொன்றுக்கும் புள்ளடியிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
கைதான இரு சந்தேகநபர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சட்டவிரோதமான வாக்குச்சீட்டுக்கள் யாவும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
