
23 வேட்பாளர்கள் மாயம்!தொலைபேசி இலக்கங்களும் போலி என்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கை இம்மாதம் 21ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் முன் னிலையாகியுள்ள வேட்பாளர் களுள் 23 பேரின் தற்போதைய நிலை தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை என தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொது மக்களுக்கான கூட்டங்களை நடத்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பது சுமார் 15 வேட்பாளர்கள் மாத்திரமே எனவும் அறியக் கிடைத்துள்ளது.
அதேபோல், குறித்த 23 வேட் பாளர்கள் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு வழங்கியுள்ள தொலை பேசி இலக்கங்கள் கூட போலி யானவை என தகவல்கள் வெளி யாகியுள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது பிரதான நான்கு கட்சிகளும் தமது தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின் றமை தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
