
ஐனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் யாழ். மாவட்டத்தில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் 257 திட்டங்களுக்கு ஜனாதிபதி செயலகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு 11 பிரதேச செயலர் பிரிவுகளில் 146 திட்டங்களுக்கு 47 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 14 வேலைத் திட்டங்கள் இதுவரை முடிவுறுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு 13 பிரதேச செயலர் பிரிவுகளில் 21.45 மில்லியன் ரூபாவில் 97 திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 9 வேலைத் திட்டங்கள் நிறைவுறுத்தப்பட்டுள்ளன.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு 14 திட்டங்களுக்கு 25 மில்லியன் ரூபா நிதி 4 பிரதேச செயலர் பிரிவு களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலைத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்படும் என யாழ். மாவட்ட பதில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
