

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசிப்பொதிகள், கிளிநொச்சி - கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் கடற்றொழிலாளர்களுக்கு கையளிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது, இன்று (26.07.2024) பிற்பகல் 1:30 மணியளவில் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசிப்பொதிகள் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று தட்டுவன்கொட்டி, நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு இந்த அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நேற்றைய தினம் குறித்த அரசிப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
