இலங்கையில் ஒரு வாரமாக நிலவிய மழை காரணமாக13 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 547 பேர் பாதிப்பு
6 months ago

இலங்கையில் கடந்த ஒரு வாரமாக நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், காற்று மற்றும் மண்சரிவு என்பவற்றால் 13 மாவட்டங்களில் 40 ஆயிரத்த 768 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 2 ஆயிரத்து 433 குடும்பங்களைச் சேர்ந்த 10ஆயிரத்து 361 பேர் 80 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும், 380 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
