திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்
3 months ago

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று மாலை திருகோணமலை கடற்கரையில் நடைபெற்றது.
இராவணன் சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேற்படி படுகொலைச் சம்பவம் திருகோணமலை கடற்கரையில் 02.01.2006 அன்று இடம்பெற்றது.
இலங்கை இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்தப் படுகொலையைச் செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் லோகிதராசா ரொகான்,சண்முகராஜாசஜீந்திரன், மனோகரன் வசீகர், தங்கத்துரை சிவானந்தன், யோகராஜா கேமச்சந்திரன் ஆகிய தமிழ் மாணவர்கள் உயிரிழந்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
