

விபுலானந்த அழகியல் நிறுவகத்தில் புகைப்பட கண்காட்சி ஆரம்பமானது
கிழக்கு பல்கலைக்கழக மட் டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் 16ஆவது புகைப்படக் கண்காட்சி, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக வளாகத்தில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மண்ணின் வாழ்வியல் மற்றும் கலை கலாசாரத்தை மையப்படுத்தி எம். சிவகுமாரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே காட்சிப்படுத்தப்பட்டன.
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் போராசிரியர் பாரதி கெனடி புளோரன்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
இந்தப் புகைப்பட கண்காட்சியானது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
