படைகளின் வசமுள்ள தமது காணிகளை வழங்குமாறு கோரி பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கேப்பாபிலவு மக்கள் மனு
5 months ago

படைகளின் வசமுள்ள தமது காணிகளை தங்களிடமே வழங்குமாறு கோரி பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கேப்பாபிலவு மக்கள் மனு ஒன்றை கையளித்தனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்திருந்தார்.
புதுக்குடியிருப்பில் நேற்று நடந்த பரப்புரையில் பங்கேற்ற பிரதமரை நேரில் சந்தித்த கேப்பாபிலவு மக்கள் படைகளின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மனு ஒன்றை வழங்கினர்.
இதேபோன்ற மனுவை அவர்கள் வடக்கு ஆளுநர், முல்லைத்தீவு அரச அதிபர் ஆகியோரிடமும் முன்னர் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
