இலங்கை முன்னாள் அமைச்சர்கள் சிலர் தம்மிடம் லஞ்சம் கோரியதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் முறைப்பாடு
5 months ago

முன்னைய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் சிலர் தம்மிடம் லஞ்சம் கோரியதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் நியோன் லீ மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல்ஸ் ஸ்ரீபன் ஆகியோரே முன்னைய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் தம்மிடம் லஞ்சம் கோரினார்கள் என்று முறையிட்டுள்ளனர்.
முத்துராஜவனம் தொடக்கம் கட்டுநாயக்க விமான நிலையம் வரையிலான எரிபொருள் குளாய்களைப் பொருத்துவதற்காகத் தம்மிடம் லஞ்சம் கோரப்பட்டதாக தென்கொரியத் தூதுவர் நியோன் லீ தெரிவித்துள்ளார்.
முறைப்படி அனுமதியைப் பெற்று தமது திட்டங்களை முன்னெடுத்த போதிலும், இலங்கையின் அமைச்சர்கள் தமது திட்டங்களை நிறைவேற்ற இழுத்தடித்தனர்.
இறுதி அனுமதியை வழங்குவதற்குப் பின்னடித்தனர் என்றும் தென்கொரியத் தூதுவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
