காசாவின் பெய்ட் லகியாவில் இஸ்ரேலின் வான் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
7 months ago

காசாவின் பெய்ட் லகியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதல்களில் பெண்கள் குழந்தைகள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளனர் பலர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர் என அங்குள்ள மருத்துவ பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரிழப்புகள் குறித்த விபரங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் எனினும் ஹமாசின் தற்போதைய புள்ளி விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 73 பேர் உயிரிழந்தனர் என ஹமாசின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வபா எனப்படும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது என பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
