யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை
7 months ago

யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று முன்தினம் உயிரிழந்தது.
கொடிகாமம் - தவசி குளத்தைச் சேர்ந்த துசியந்தன் டனுசியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந் தது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 16ஆம் திகதி குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர் குழந்தையை சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
மேலதிக சிகிச்சைக்காக நேற்று முன்தினம் குழந்தை யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. எனினும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசா ரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டு பிடிக்கப்படாத நிலையில் உடல்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
